பாவ அறிக்கை ஜெபம் 1 சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே, தப்பிப் போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம். எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தோம் செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்து வந்தோம். எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும் ஆண்டவரே தேவரீர் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச் செய்த வாக்குதத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும் பாவத்தினிமித்தம் துக்கப்படுகின்ற எங்களைச் சீர்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனித் தேவ பக்தியும், நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குகிருபை செய்தருளும். ஆமென். 2 எங்கள் தந்தையாம் கடவுளே, நினைவினாலும் வார்த்தைகளினாலும் செய்கையினாலும் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்திருக்கிறோம். முழு மனதோடு நாங்கள் உம்மை நேசிக்கவில்லை. எங்களிடத்தில் நாங்கள் அன்பு கூறுவதுபோல அயலாரிடத்தில் நாங்கள் அன்பு கூறவில்லை. எங்கள்மேல் இரக்கமாயிருக்க உம்மை வேண்டிக்கொள்கிறோம். எங்கள் பாவ அழுக்கை நீக்கி எங்களைச் சுத்திகரியும். எங்கள் குற்றங்களை விட்டுவிட எங்களுக்கு உதவி புரியும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்