மாலை ஆராதனை முறை
பிரியமான சகோதரரே, நம்முடைய பாவங்களை பணிவோடும் தாழ்மையோடும் கடவுளின் சந்நிதியில் அறிக்கையிடுவோம்.
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, தப்பிப் போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம்... ஆமென்.
மெய்யாய் மனந்திரும்பி தமது பரிசுத்த சுவிஷேசத்தை உண்மையாய் விசுவாசிக்கிற யாவருக்கும், தேவன் பாவங்களை மன்னித்து விமோசனம் செய்கிறார்.
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக... இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்... நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.
சகல பரிசுத்த விருப்பங்களுக்கும் காரணமாகிய கடவுளே, உலகம் தரக்கூடாத சமாதானத்தை உமது அடியார்களுக்குத் தந்தருளும்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களனைவரோடும் இருப்பதாக. ஆமென்.